முக்கிய இரு நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி!
அரசாங்கத்தின் வருமான இலக்குகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவியில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒப்பந்த அடிப்படை
குறித்த பதவியானது செப்டெம்பர் 24 ஆம் திகதி முதல் வெற்றிடமாக உள்ள நிலையில், சூரியப்பெரும இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியாவார்.
இதேவேளை, ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய ஜே.எம்.குணசிறிக்குப் பதிலாக பதில் மதுவரி ஆணையாளர் நாயகமாக யு.டி.என் ஜயவீரவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டு இறைவரி சேவையின் அனுபவம் வாய்ந்த அதிகாரியான ஜயவீர, நல்லாட்சியை உறுதிசெய்து அதன் வருவாய் இலக்குகளை அடைவதில் திணைக்களத்தை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
