புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காகவே பண்டோரா ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன! அமைச்சர் தகவல்
புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு அமையவே பண்டோரா ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க(C B Rathnayake) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
இந்த பண்டோரா ஆவணங்களில் நிருபமா ராஜபக்சவின் பெயர் வந்துள்ளது. விஜயதாச ராஜபக்சவின் இப்படியான ஆவணங்கள் வெளிவந்தால், மகிந்த ராஜபக்சவா அதற்கான குற்றவாளி?. கோட்டாபய ராஜபக்சவா குற்றவாளி?
ராஜபக்ச என்ற பெயர் இருப்பதால் மாத்திரம் குற்றசாட்டை முன்வைக்க முடியாது. உறவு முறைகள் வேறு, அரசியல் என்பது வேறு. இதனால், அரசியலை வைத்து தாக்குதல் தொடுக்க முடியாது.
அண்மையில் உயிரிழந்த கிளி மஹாராஜாவும் திருக்குமார் நடேசனும் உறவினர்கள். அவர்களிடமும் பெருந்தொகையான பணம் இருக்கின்றது. அப்படியானால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அது பற்றியும் பேச வேண்டும். ஏன் அது பற்றி பேசுவதில்லை.
மஹாராஜா நிறுவனத்திடம் சம்பளத்தை பெறுவதால், மனுஷ நாணயக்கார, மரிக்கார் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி பேசுவதில்லையா? எனவும் சீ.பி. ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.