பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பெண் தொழிலதிபர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மின்னணு சிகரெட்டுகளுடன் பெண் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைது நடவடிக்கையானது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக 262 மின்னணு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் விட்டுச் சென்ற போதே இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பிணையில் விடுதலை
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு- தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து மீட்கப்பட்ட சிகரெட் கையிருப்பின் மதிப்பு மூன்று மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாகவும் பணியக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 7 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 15 மணி நேரம் முன்

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
