கொழும்பு மாநகரசபையை அநுரவின் கட்சி கைப்பற்ற உதவும் வர்த்தகர்கள் : குற்றம் சுமத்தும் முஜிபுர்
கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை அமைப்பதற்காக, ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு உதவ, வர்த்தகர்கள் குழு ஒன்று முன்வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஐந்து சுயாதீன குழுக்கள்
தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் சில வர்த்தகர்கள், இதற்காக உறுப்பினர்களுக்கு நிதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்குற்றச்சாட்டை தாம் பொறுப்புடன் முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2025 உள்ளூராட்சி தேர்தலில், கொழும்பு மாநகரசபையில் ஐந்து சுயாதீன குழுக்கள் ஆசனங்களை வென்றன. சுயேட்சை குழு 1 ஒரு இடத்தையும், குழு 2 ஒரு இடத்தையும், குழு 3 மூன்று இடங்களையும், குழு 4 இரண்டு இடங்களையும், குழு 5 இரண்டு இடங்களையும் பெற்றன.
இதில், இரண்டு இடங்களைப் பெற்ற சுயேட்சை குழு 5, தமது ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் உறுதியை வழங்கியுள்ளதாக. ரஹ்மான் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam
