லண்டன் - சவுத்வார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் தேர்வு
லண்டன் - சவுத்வார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் 2வது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் பிறந்த சுனில் சோப்ரா சவுத்வார்க் கதீட்ரலில் நேற்று மேயராக பதவியேற்றுள்ளார்.
இவர் 2014-2015 இல் 'லண்டன் பரோ ஆப் சவுத்வார்க்' என்றழைக்கப்படும் லண்டன் மாநகரின் உள்ளூர் நகரமான சவுத்வார்க் நகரத்தின் மேயராகவும், 2013-2014 இல் துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார்.
போரோவில் மதிப்புமிக்க அலுவலகத்தை வகித்த முதல் இந்திய வம்சாவளி நபர் அவர் என்பதுடன், இவர் மூன்று முறை துணை மேயராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதை எண்ணமாக கொண்டு சோப்ரா செயல்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam