மத்திய கிழக்கில் ஏற்படவுள்ள பேரழிவு.. இஸ்ரேலின் அதிரடி திட்டம் குறித்து எச்சரிக்கை
ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான நேரடித் தாக்குதல், "மிக அதிக கதிரியக்க வெளியீட்டை" ஏற்படுத்தும் என்றும், இது ஆலையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்குள் உள்ள மக்களைப் பாதிக்கும் என்றும் அணுசக்திக்கான சர்வதேச அமைப்பின் இயக்குனர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புஷேர், ஈரானில் உள்ள அணுசக்தி தளம், அங்கு தாக்குதலின் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும். ஒரு இயங்கும் அணு மின் நிலையமாக, புஷேர் ஆயிரக்கணக்கான கிலோகிராம் அணுசக்தி பொருட்களை வைத்திருக்கின்றது என அவர் கூறினார்.
புஷேர் அணுமின் நிலையம்
தெற்கு ஈரானில் அமைந்துள்ள புஷேர், அது தெஹ்ரானை விட பிராந்தியத்தில் உள்ள பல அமெரிக்க நட்பு நாடுகளின் தலைநகரங்களுக்கு அருகில் உள்ளது.
புஷேர் அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடந்தால், நேரடித் தாக்குதலால் சுற்றுச்சூழலுக்கு மிக அதிக அளவு கதிரியக்கத்தன்மை வெளியிடப்படும்.
ஆலையின் மின் விநியோகக் கோடுகளை முடக்கும் ஒரு தாக்குதல் அதன் உலையின் மையப்பகுதி உருகுவதற்கு வழிவகுக்கும், இதன் விளைவாக மிக அதிக அளவு கதிரியக்கத்தன்மை வெளியிடப்படும்.
கொடூர அழிவு
அத்துடன், ஆலையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்கள் கதிர்வீச்சினால் ஆபத்தில் இருப்பார்கள் என்றும், தாக்குதல் நடந்தால் வெளியேற்றம், அயோடின் சிகிச்சைகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் என்பன மிக மிக அவசியமாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம், இஸ்ரேலிய இராணுவம், புஷேர் அணுமின் நிலையத்தின் தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது.
பின்னர், குறித்த தகவல் தவறானது என்ற தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே குறித்த பகுதி தாக்கப்பட்டால் ஈரான் மாத்திரமின்றி பல நாடுகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 26 நிமிடங்கள் முன்

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
