தனியார் பேருந்து வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து: நால்வர் படுகாயம் (Photos)
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி, ஆரையம்பதி பாலமுனை சந்தியில் தனியார் பேருந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில், மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் களுவாஞ்சிக்குடியில் இருந்து மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும் ஆரையம்பதி பாலமுனை சந்தி வீதி வளைவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam