காலியில் வாக்குப் பெட்டிகளுடன் விபத்தில் சிக்கிய பேருந்து
காலியில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (13) காலை புஸ்ஸ வெல்லமடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பேருந்து காலி தெற்கற்ற பெண்கள் கல்லூரியில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த வாக்குப்பெட்டிகளை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 48 நிமிடங்கள் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
