கண்டியில் இயந்திரக் கோளாறினால் விபத்துக்குள்ளான பேருந்து : 30 பேர் காயம்
கண்டியில் இயந்திரக் கோளாறு காரணமாக பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் அமைந்திருக்கும் பிரபல நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்திற்கு பூண்டுலோயா பகுதியிலிருந்து பக்தர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
பேருந்து இயந்திரக் கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த பேருந்தில் சாரதியுடன் சுமார் 30 பேர் பயணித்துள்ளதுடன், அனைவரும் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |