கொழும்பு புறநகர் பகுதியில் வீட்டுகுள் புகுந்த கொள்ளையர்கள் அட்டகாசம்
கொழும்பு புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றிற்கு இரவு வேளையில் புகுந்து பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 06 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி குறித்த நபர் பெண்ணின் தங்க நகையை கொள்ளையடித்துள்ளதாகவும், அவர் 54 வயதான படோவிட்ட, மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 20 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam