புனர்வாழ்வு பணியகம்:சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அச்சம்
புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் போராட்ட எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு வழி வகுக்கும் என்று சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
போராட்ட செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வு முகாம்களில் நீண்டகாலம் தடுத்து வைக்க இந்த சட்டமூலம் அனுமதிக்கும் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, புனர்வாழ்வு பணியகம் என்ற சட்டமூலத்தை செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.
போதைப்பொருள் சார்ந்தவர்கள், முன்னாள் மற்றும் தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகள், வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே பணியகத்தின் நோக்கமாக இருக்கும் என்று இந்த சட்டமூலம் குறிப்பிடுகிறது.
இந்தநிலையில் பணியகத்தின் நிர்வாகம், மேலாண்மை மற்றும் விவகாரங்களின்
கட்டுப்பாடு ஆகியவை சபை ஒன்றிடம் ஒப்படைக்கப்படும்.
அத்துடன் பணியகம், பாதுகாப்பு செயலாளர், சுகாதாரம், கல்வி மற்றும் மறுவாழ்வு
கூடுதல் செயலாளர்களையும் கொண்டிருக்கும்.
சட்டமூலத்தின்படி...

கூடுதலாக, புனர்வாழ்வு அமைச்சர் மூன்று உறுப்பினர்களை நியமிப்பார், அவர்கள் கல்வி, தொழில்முறை தகுதிகள் மற்றும் புனர்வாழ்வு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் சபையின் தலைவரை நியமிக்கவும் நீக்கவும் புனர்வாழ்வு அமைச்சருக்கு உரிமை உள்ளது.
இந்த சட்டமூலத்தின்படி, இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை
கடற்படை ஆகியவற்றின் எந்தவொரு உறுப்பினரையும் புனர்வாழ்விற்காக வழிநடத்தும்
அதிகாரம் பணியகத்திற்கு வழங்கப்படும்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri