நாட்டிற்கு வெளியே பதுக்கி வைக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம்! ஒவ்வொரு குடிமகனுக்கும் நட்ட ஈடு(Video)
ராஜபக்ச சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே வைத்துள்ள பணத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களும் அவரது சகாக்களுமே காரணம் என உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்து.
திருடப்பட்ட பொதுப் பணம்
எனினும், அவர்களிடம் இழப்பீடு கோரவில்லை. மனுதாரர்கள் இழப்பீடு கோரவில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இழப்பீடு செலுத்துமாறு ராஜபக்ச சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம். ஏனெனில், அவர்களால் அதனை செலுத்தியிருக்க முடியும்.
ராஜபக்ச சகோதரர்கள் இலங்கைக்கு வெளியே வைத்திருக்கும் பணத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.
நாட்டிற்கு வெளியே வைத்துள்ள அனைத்து பணத்தையும் மீண்டும் கொண்டு வர முடியும். அந்த பணத்தால் தான் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும்.
முன்னாள் ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலரால் பொதுப் பணம் திருடப்பட்டதாலேயே நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு வழங்கவும், திருடப்பட்ட பணத்தை திறைசேரிக்கு கொண்டு வரவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு கோருவதற்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri