அரசாங்கம் தமிழர் தாயக பகுதியில் பிரச்சினைகளை உருவாக்குகின்றது: கோ.ராஜ்குமார் (video)
சிங்கள அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு எத்தனையோ பிரச்சினைகளை உருவாக்குகிறது என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
போராட்ட பந்தலில் இன்று (24.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நிலையில் தமிழ் இறையாண்மைக்கும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உதவிக்காகவும் எமது போராட்டத்தின் 2255வது நாள் இன்றாகும்.
இலங்கை அரசாங்கம்
இந்நிலையில் குருந்தூர் மலை, வெடுக்குநாரி, கிண்ணியா வெண்ணீரூற்று கிணறு, திருக்கோணேஸ்வரம், காணி அபகரிப்பு, இராணுவ முகாம்களை சுற்றி கொலைகள் போன்ற இடங்களில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்களில் எல்லாம் பொது வாக்கெடுப்பு அல்லது அரசியல் தீர்வுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தலையீடு வேண்டும் என கூறுங்கள்.
இலங்கையையோ, இந்தியாவையோ அல்லது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ நம்ப வேண்டாம்.
சிங்கள அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு எத்தனையோ சிறு பிரச்சினைகளை உருவாக்குகிறது. அதனால் சிங்களவர்கள் தமிழர்களை அரசியல் தீர்வுகளில் இருந்து தமிழர்களின் சிந்தனையை திசைதிருப்பும்படி கட்டாயப்படுத்துகிறார்கள்.
நாம் எதிர்நோக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரே தீர்வு, சிங்களவர்களின் அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புகளில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்கும் நிரந்தர அரசியல் தீர்வாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
