49 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம்! பௌத்த மத பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள கரிசனை
49 ஆண்டுகளுக்கு முன்பு மலர் ஊர்வலமாகத் ஆரம்பிக்கப்பட்ட மஹரகம பெரஹெரா, இப்போது ஒரு பெரிய ஊர்வலமாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மஹரகம ராஜமஹா விஹாரையின் வருடாந்திர ஊர்வலத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குடிமக்களின் பொறுப்பு
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,'' புத்த சாசனத்தைப் பாதுகாப்பது அனைத்து குடிமக்களின் பொறுப்பும் கடமையும் ஆகும். அது நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பில் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
புத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும், பிற மதங்கள், இனங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும், அதன் மூலம் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் நாடு உறுதிபூண்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமை
இந்த பெரஹெரா பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்கும் உயிர்வாழ்விற்கும் முக்கியமானது. நாட்டின் ஒற்றுமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டிற்காக பௌத்த மதத்தைப் பாதுகாப்பது முக்கியம்.
இந்த பெரஹெரா கலாசாரத்தை பௌத்த மதத்தின் முன்னேற்றத்தையும் நிலைத்தன்மையையும் நிரூபிக்கும் ஒரு முக்கியமான செயலாக விவரிக்கலாம்.
புத்த பெருமானின் தூய பௌத்த மதத்தின் பல்வேறு அறிவுரைகளையும் அறிவுறுத்தல்களையும் நாம் பின்பற்றும்போது, ஆரோக்கியமான மற்றும் வளமான நாட்டை உருவாக்க முடியும்.''என்று கூறியுள்ளார்.




