இலங்கையில் இரண்டு தேசத்தை உறுதிசெய்யும் புத்தர் சிலை விவகாரம் - அரசியல் ஆய்வாளர் தகவல்

Trincomalee Mahinda Rajapaksa Sajith Premadasa Sri Lanka Government
By Erimalai Nov 23, 2025 07:13 AM GMT
Report

திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டபோது சிங்கள அரசியல்வாதிகள் அதனை எதிர்த்தே பேசினார்கள். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அதனை ஆதரித்தே பேசினார்கள்.

இந்த விடயம் இலங்கையில் இரண்டு தேசங்கள் உள்ளன என்பதை மேலும் உறுதிப்படுத்தியது என அரசியல் ஆய்வாளரும், சமூக வி்ஞ்ஞான ஆய்வுமைய இயக்குநருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த விடயத்தின் பின் கருத்து தெரிவித்த சுமந்திரன் அனைத்து வட கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டும் என்று சொல்லியிருந்தார்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ராமச்சந்திரா உடனடியாக தமது கட்சியில் சேர வேண்டும் என்று சொன்னார்.

இவ்வாறு கூடியவர்கள் சஜித் பிரேமதாச கூறிய கூற்றிற்கு எதிராக ஒரு அறிக்கை கூட விடவில்லை, இவ்வளவிற்கும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கச் சொன்னவர்கள் இவர்கள் தான். இதில் அவர்கள் இரண்டு மனோநிலையில் இருந்து தமது அறிக்கைகளை வெளியிட்டதை பார்க்க முடிகிறது.

இந்தியாவில் ஜீவன் தொண்டமானின் பிரமாண்ட திருமணம்! வெளியாகியுள்ள புகைப்படங்கள்

இந்தியாவில் ஜீவன் தொண்டமானின் பிரமாண்ட திருமணம்! வெளியாகியுள்ள புகைப்படங்கள்

இலங்கையில் இரண்டு தேசத்தை உறுதிசெய்யும் புத்தர் சிலை விவகாரம் - அரசியல் ஆய்வாளர் தகவல் | Buddha Statue That Confirms Two Nations Sri Lanka

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் 

இந்த புத்த விகாரை விவகாரங்களில் ஒரு ஆக்கிரமிப்பு பிரச்சினை, சட்டப்பிரச்சினை, ஒரு அரசியல் பிரச்சினையும் இருக்கிறது.ஆக்கிரமிப்பு பிரச்சினை தான் தமிழ் மக்கள் கரிசனை கொள்ளக்கூடிய விடயம்.

ஏனெனில் திருகோணமலை மாவட்டம் தான் முழுமையாக ஆக்கிரமிப்பிற்கு உட்பட பிரதேசம், நான் ஏற்கனவே கூறியது போல திருகோணமலை மாவட்டத்தில் எல்லாவிதமான ஆக்கிரமிப்புக்களும் பரீட்சித்து பார்க்கப்பட்டது.

அங்கு சட்டவிரோத குடியேற்றம், திட்டமிட்ட விவசாய குடியேற்றம், திட்டமிட்ட மீனவக் குடியேற்றம், முப்படை பண்ணைகளுக்கா குடியேற்றம், வியாபார குடியேற்றம், புனித பிரதேச குடியேற்றம் என ஏல்லாமே பரீட்சித்து பார்க்கப்பட்டது.

திருகோணமலை நகரத்தை பொறுத்தவரை அங்கு நடந்த ஆக்கிரமிப்புக்கள் எல்லாமே சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கள் தான். எதுவும் சட்டரீதியாக இடம்பெறவில்லை.

கோணேசர் கோயில் சூழலை பொறுத்தவரை அங்கு பச்சை ஆக்கிரமிப்பு, கோணேஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள காணிகள் எல்லாம் மன்னர் காலத்தில மன்னர்களல் கோயிலுக்காக கொடுக்கப்பட்ட காணிகள். அதனை போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் அவர்கள் அக்காணிகளை எடுத்துள்ளனர்.

இலங்கையில் இரண்டு தேசத்தை உறுதிசெய்யும் புத்தர் சிலை விவகாரம் - அரசியல் ஆய்வாளர் தகவல் | Buddha Statue That Confirms Two Nations Sri Lanka

ஆக்கிரமிப்பிற்கு உட்பட பிரதேசம்

அதில் பல அரசு அபகரித்தது. ஆகவே பூர்வீக காணிகள் அரசிற்கு கிடையாது. அதிலும் 2014ம் ஆண்டு புத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் மகிந்த ராஜபக்சவால் அளிக்கப்பட்ட ஒரு பத்திரம் மூலம் தான் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே இது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம், ஆகவே இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றது என்பதை வெளியில் கொண்டுவரப்பட வேண்டும் .

இரண்டாவது சட்டப்பிரச்சினை இன்று மக்கள் தமது சொந்த ஆதனத்தில் ஒரு மதிலை கட்டுவது என்றாலே பிரதேச சபை அனுமதி பெறப்படவேண்டும்.

அந்த வகையில் குறித்த பகுதி திருகோணமலை மாநகராட்சி மன்ற அனுமதியோ அல்லது கரையோர திணைக்கள் அனுமதியோ பெற்றுக்கொள்ளவில்லை.

இவர்கள் இரவிரவாக புத்தர் சிலையை கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு பச்சை ஆக்கிரமிப்பு மீண்டும் ஒருமுறை இடம்பெற்றதாகவே பார்க்க வேண்டும்.

அரசாங்கத்தின் போதைவஸ்து மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளால் சிங்களவர்கள் ஆடிப்போயுள்ளார்கள். தங்கள் மீதும் இந்த சட்டம் பாயும் என்கின்ற அச்சத்தோடு இருக்குன்றார்கள்.

அரசு செய்கின்ற ஆக்கிரமிப்பு

அந்த அச்சம் காரணமாகவே நேற்றைய தினம் ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தார்கள், ஆகவே அந்த ஆர்ப்பாட்டத்தை மேலும் பெரிதாக்குவதற்கே அந்த புத்தர் சிலை விவகார்த்தை அவர்கள் செய்திருக்கிறார்கள் என நான் கருதுகின்றேன்.

பேரினவாதிகள் தங்களது அரசியல் நலனுக்காகவே இதனை செய்திருக்கின்றார்கள் என்றே நாங்கள் பார்க்கின்றோம். ஆகவே தான் இந்த விவகாரத்தை மக்கள் மத்தியிலும், சர்வதேசத்திடமும் கொண்டுசெல்ல வேண்டிய மிகபெரிய தேவை இருக்கிறது.

ஆகவே தமிழ் தரப்புக்கள் இதனோடு சேர்த்து அரசு செய்த அனைத்த ஆக்கிரமிப்புக்களையும் ஆவணப்படுத்தி வெளியிடுவதால் தான் இந்த அரசு செய்கின்ற அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் அம்பலப்படுத்த முடியும்.

இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுத்தவரை மிகவும் அச்சப்பட்ட ஒரு சூழலில் இருப்பது போல் தான் தெரிகின்றது.

மாவீரர் தினத்தை அச்சமின்றி அனுஷ்டிக்க முடியும் என்றார்கள், பின்னர் பயங்கரவாதிகளை நினைவுகூர முடியாது என்றார்கள். அவர்கள் கார்த்திகை வீரர்கள் தினத்தை நினைவு கூறுகின்றார்கள், ஆகவே இங்கு அவர்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா என்றும் தெரிவித்துள்ளார்.

நகைகளை அடகு வைக்க குவியும் பெருந்தொகை மக்கள்

நகைகளை அடகு வைக்க குவியும் பெருந்தொகை மக்கள்

 

சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US