நீர்கொழும்பில் பெண் ஒருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல்
நீர்கொழும்பில் நபர் ஒருவர் பெண் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மற்றுமொரு பெண் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, கிம்புலபிட்டிய பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அயல்வீட்டவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடூர தாக்குதலுக்குள்ளான பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சீசீடீவியில் பதிவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.