மரண வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு - ஒருவர் பலி - ஒருவர் காயம்
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருமட பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, 2 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 35 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த மற்றொரு நபர் மஹியங்கனை, சொரபோர பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு
உயிரிழந்தவரின் உறவுக்கார சகோதரியின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய 45 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 20 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan