வவுனியாவில் அண்ணனால் தங்கைக்கு நேர்ந்த கதி: இளைஞர் கைது
வவுனியா - பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய அண்ணனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வவுனியா - பட்டக்காடு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரிக்கு நேர்ந்த கதி
தந்தையின்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், சகோதரி வசித்து வந்த நிலையில் தனிமையிலிருந்த தங்கையை அண்ணன் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ
பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.