இலங்கையில் கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு
பிரித்தானியாவின் முன்னணி கால்பந்தாட்டக் கழகத்தில் ஒன்றான டொர்குவே யுனைடெட் கழகம் (Torquay United) இலங்கை அணி வீரர் டில்லன் டி சில்வாவை நிரந்தர ஒப்பந்தம் செய்துள்ளது.
21 வயதான இலங்கை சர்வதேச வீரர், கடந்த சீசனில் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸிடம் (Queens Park Rangers) கல்ஸ் அணிக்காக 26 போட்டிகளில் நான்கு கோல்களை அடித்தார்.
மகிழ்ச்சியை தெரிவித்த விளையாட்டுக்கழகம்
இவர் போட்டிப்பருவத்திலும் அதற்கு முன்னைய பருவத்திலும் எங்களுடன் தொடர்புடன் இருந்ததாக (Torquay United) கழகத்தின் மேலாளர் கேரி ஜான்சன் கூறினார்.
மேலும் எங்கள் விளையாட்டுக்கழகத்தை அறிந்த மற்றும் எங்கள் கலாச்சாரத்தை அறிந்த ஒருவரை தாமதமான கட்டத்தில் கொண்டு வந்திருந்தாலும் இதன் மூலம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |