பிரிட்டன் அதிரடி: ரஷ்ய கோடீஸ்வரரின் ஜெட் விமானங்கள் பறிப்பு - செய்திகளின் தொகுப்பு
ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான யூஜின் ஷ்விட்லருக்கு சொந்தமான இரண்டு ஜெட் விமானங்களை இங்கிலாந்து பறிமுதல் செய்துள்ளது.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் மேலை நாட்டு அரசாங்கங்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருங்கிய ஆதரவாளர்களின் ஆடம்பர வாழ்க்கையைக் குறிவைத்து அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் மீது புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் போரை ஆதரித்தவர்களுடன் ஷ்விட்லருக்கு இருந்த தொடர்புகள் காரணமாகவும், புடின் ஆட்சிக்கு அவர் அளித்த ஆதரவில் இருந்து அவர் இலாபம் அடைந்ததாலும் ஷ்விட்லரின் விமானங்களைப் பிரிட்டன் அரசு பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri