இலங்கையில் ஊழல் - மோசடிகளை தடுக்க உதவும் பிரித்தானியா
இலங்கையில் ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பதற்கு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுடன் நேற்று (10.07.2024) நடத்திய சந்திப்பின் போது, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் ஆட்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்ற முறைமை குறித்து தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் இதன்போது முன்மொழிந்துள்ளார்.
உள்ளூர் அரசாங்க அமைப்பு
பிரித்தானிய உள்ளூர் அரசாங்க அமைப்பு, மோசடி மற்றும் ஊழலைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச வருவாயை அதிகரிக்கும் அதே வேளையில் மோசடி மற்றும் ஊழலை எதிர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
