ஒரே மாதத்தில் பல பில்லியன்களை கடனாக பெற்ற பிரித்தானிய அரசு
பிரித்தானிய அரசு இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் 16.6 பில்லியன் பவுண்டுகள் (21.6 பில்லியன் டொலர்கள்) கடனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பிரித்தானியாவின் வரலாற்றில் மூன்றாவது பெரிய கடன் தொகை என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பல்வேறு பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி பிரித்தானிய அரசு செப்டெம்பர் மாதத்தில் 17.5 பில்லியன் பவுண்டுகள் வரை கடன் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம்
செலவினங்களுக்கும் வரி வருவாய்க்கும் இடையிலான வேறுபாட்டின் அடிப்படையில் இந்த கடன் தொகை பெறப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகின்றது.
இதேவேளை, இந்த தொகை கடந்த வருடம் செப்டெம்பரில் பெறப்பட்ட தொகையை விட 2.1 பில்லியன் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam
