இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றோம்! - பிரித்தானியா அறிவிப்பு
இலங்கையுடன் இணைந்து காலநிலை நடவடிக்கைக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் (Lisa Whanstall இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் காலநிலை தொடர்பான COP26 மாநாட்டை கிளாஸ்கோவில் நடத்தியது. இதில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரித்தானியா நடத்திய உலகத் தலைவர்களின் மிகப்பெரிய கூட்டமாக காலநிலை உச்சி மாநாடு இருந்தது.
பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு மாநாடு (UNFCCC) ஆகியவற்றின் இலக்குகளை நோக்கி நடவடிக்கையை துரிதப்படுத்த இது உலக நாடுகளை இந்த மாநாடு ஒன்றிணைத்தது.
இதில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டு காலநிலை மாற்றம் தொடர்பில் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, இலங்கையுடன் இணைந்து காலநிலை நடவடிக்கைக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இது குறித்து பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் பேரழிவை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவு செய்து செயல்படுத்துவதன் மூலம், இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள உலகம் நாடுகள் ஒன்றுபட முடியும்.” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், காலநிலை நடவடிக்கை உறுதிமொழிகளை நிறைவேற்ற பிரித்தானிய இலங்கையுடன் இணைந்து செயல்படுகிறது”. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri