இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றோம்! - பிரித்தானியா அறிவிப்பு
இலங்கையுடன் இணைந்து காலநிலை நடவடிக்கைக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் (Lisa Whanstall இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் காலநிலை தொடர்பான COP26 மாநாட்டை கிளாஸ்கோவில் நடத்தியது. இதில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரித்தானியா நடத்திய உலகத் தலைவர்களின் மிகப்பெரிய கூட்டமாக காலநிலை உச்சி மாநாடு இருந்தது.
பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு மாநாடு (UNFCCC) ஆகியவற்றின் இலக்குகளை நோக்கி நடவடிக்கையை துரிதப்படுத்த இது உலக நாடுகளை இந்த மாநாடு ஒன்றிணைத்தது.
இதில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டு காலநிலை மாற்றம் தொடர்பில் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, இலங்கையுடன் இணைந்து காலநிலை நடவடிக்கைக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இது குறித்து பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் பேரழிவை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவு செய்து செயல்படுத்துவதன் மூலம், இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள உலகம் நாடுகள் ஒன்றுபட முடியும்.” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், காலநிலை நடவடிக்கை உறுதிமொழிகளை நிறைவேற்ற பிரித்தானிய இலங்கையுடன் இணைந்து செயல்படுகிறது”. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam