வவுனியாவில் பாலம் அமைக்கும் பணி தாமதம்: பொதுமக்கள் வினம்
வவுனியா ஏ9 வீதியில் பாலம் அமைக்கும் பணி தாமதமடைந்துள்ளமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏ9 வீதியில் வவுனியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இருந்த பழையபாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்பட்டது.
பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடக்கின்ற நிலையில் பாலம் பூர்த்தி செய்யப்படாமையினால் அந்த வீதியூடாக போக்குவரத்துச் செய்யும் பொதுமக்களும் வாகனமோட்டிகளும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நடவடிக்கை
குறித்த வீதி பிரதான வீதியாக உள்ளமையினால் அதிகமான வாகனங்கள் அந்த வீதியை பயன்படுத்தி வருகின்றது.
இந்த சூழ்நிலையில் பாலம் அமைக்கும் பணி தாமதமாகின்றமையால் அந்த பகுதியில் தினமும் நெருக்கடி நிலை ஏற்ப்பட்டு வருகின்றது.
எனவே, குறித்த விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 18 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
