மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் கைது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் பல முக்கிய பதவிகளை வகித்த அனுஷ பெல்பிட்ட இன்று (23.01.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குவின் முன்னாள் அதியட்சகரும்,லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட , இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடியாக சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டு
இவர் ஊகத்துறை அமைச்சின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
நாற்பத்தாறு மில்லியன் ரூபாய் பணத்தை எவ்வாறு சம்பாதித்தார் என்பதற்கான தகவல்களை வெளியிடத் தவறியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23 (அ) 1 இன் கீழ் மோசடியாக சொத்துக்களை சம்பாதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan