இலங்கையில் 10 வருடங்களாக காதலிக்காக காத்திருந்த காதலன்! இருட்டிலிருந்து காப்பாற்றிய இளைஞன்
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட்களாக இருந்த மனநலம் பாதிக்கட்ட நபரின் வாழ்க்கையை மாற்றிய இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
பெண் ஒருவர் காதலித்து விட்டு ஏமாற்றிச் சென்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக காதலிக்காக காத்திருந்த குறித்த இளைஞன் தற்போது தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
பேராதனை பல்கலைகழக மாணவனான குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். என்றாவது ஒரு நாள் தனது காதலி கிடைப்பார் என்ற நம்பிக்கையிலேயே நீண்ட காலமாக பல்கலைக்கழக வாசலில் காத்திருந்துள்ளார்.
இதனை அவதானித்த இலங்கையில் பிரபலமடைந்த யூடிப்பர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு கொடுக்க தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய கொழும்பில் இருந்து பேராதனை சென்ற இளைஞன், மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் உரையாடியுள்ளார். அவரை அழைத்து சென்று தலை முடியை வெட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொடுத்துள்ளார்.
தன்னால் முடிந்த உதவிகளை செய்த யூடியுப் பிரபலம் மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் பெற்றோரை தேடி அவர்களிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கமைய, பெற்றோர் அவரை மீண்டும் தங்களுடன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று அவரை குணப்படுத்துவதற்கும் யூடியுப் பிரபலம் உதவி செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan