நான்கு வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளைஞன் காதலிக்கு கொடுத்த அதிர்ச்சி!
நான்கு வருடங்களாக காதல் உறவில் இருந்த பல்கலைக்கழக மாணவியான, இளம் பெண்ணின் தகாத புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, காதல் உறவை முறித்துக் கொண்டதாக கூறிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தேகொட, குடமடுவ வீதி, சிஷில் செவன பூங்காவில் வசிக்கும் இளைஞன் ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த இளம்பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
விசாரணை
அதனடிப்படையில், முறைப்பாடு அளித்த பெண் மற்றும் மற்றொரு பெண்ணின் தகாத புகைப்படங்கள் மற்றும் தகாத வீடியோக்கள் அடங்கிய மொபைல் போன், மடிக்கணினியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த 26 வயதான குறித்த பெண், மேலதிக கல்விக்காக 2022 ஆம் ஆண்டு ஹோமகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்.
இதன்போது அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும், குறித்த இளைஞனை சந்தித்து பின்னர் காதல் உறவை வளர்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
