தாயுடன் சென்ற மகளை கடத்திய பரபரப்பை ஏற்படுத்திய காதலன்
மத்துகம பிரதேசத்தில் வகுப்பில் இருந்து தாயாருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது மாணவியை, காதலன் எனக்கூறிய இளைஞன் கடத்திச் சென்றுள்ளார்.
இது குறித்து மத்துகம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவி ஹொரண பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார்.
முச்சக்கர வண்டியில் கடத்தல்
இந்த நிலையில் தனது 44 வயதுடைய தாயுடன் மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பில் இருந்து வந்து கொண்டிருந்த போது சந்தேக நபர் மற்றுமொரு நபருடன் முச்சக்கரவண்டியில் வந்துள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் மகளின் கையை இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றிச் கடத்தி சென்றதாக தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பிள்ளையின் தாயும் முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்டதாகவும், சந்தேகநபர் அவரை தாக்கி உதைத்துவிட்டு ஓடிவிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவதி கடத்தல்
சந்தேக நபர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபர் மற்றும் கடத்தப்பட்ட யுவதியை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்துகம தலைமையக குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
