மலையக காணி உரிமையை வென்றெடுக்க களமிறங்கிய சிறுவன் - 140 கிலோமிட்டர் நடைப்பயணம் ஆரம்பம்
மலையக மக்களின் காணி உரிமைகளைக் கோரி 7 வயது உலக சாதனையாளர் பிரேம் கார்கி தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த நடைப்பயணம் நேற்று(20.05.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைப்பயணம் ஆரம்பம்
மலையக வாழ் மக்களின் நில உரிமைகளை வென்றெடுப்பதையும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கும் பொறுப்புள்ள துறைகளுக்கும் தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை வழங்குவதற்காகவே தலவாக்கலை நகரத்திலிருந்து 140 கிலோமீட்டர் நடைபயணத்தை முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறு தலவக்கலை நகரத்திலிருந்து தொடங்கி, கொட்டக்கலை நகரத்தை அடைந்த போது மருத்துவ மற்றும் வர்த்தக சமூகத்தினர் உற்சாகமான வரவேற்பளித்துள்ளனர்.
இந்த நடைப்பயணம் 7 நாட்களுக்குள் கொழும்பை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் தமிழ்நாடு எமக்காக ஒரு போதும் எழுச்சியுறாது! 45 நிமிடங்கள் முன்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri