கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு (Photo)
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு மாமுனை கடலின் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (31.01.2023) செம்பியன்பற்று கடற்கரையோரத்தில் சிறுவனின் சடலம் கரையொதுங்கியதாக கூறப்படுகின்றது.
கடந்த 29 ஆம் திகதி நண்பகல் மாமுனை கடலில் 3 சிறுவர்கள் குளித்துள்ளனர். அதில் ஒரு சிறுவன் கரையேறிய போதும் ஏனைய இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவரும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சிறுவனை காப்பாற்ற முடியவில்லை...
கரையிலிருந்த சிறுவன் துரிதமாக செயற்பட்டு ஒரு சிறுவனை மயிரிழையில் காப்பாற்றியுள்ளார். மற்றைய சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
காப்பாற்றப்பட்ட 16 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன சிறுவனை தேடும் பணிகள் நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் செம்பியன்பற்று கடற்கரையோரத்தில் சிறுவனின் சடலம் கரையொதுங்கியது.


திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
