நடு வீதியில் சுமந்திரனை தடுமாற வைத்த இளைஞன் (Video)
“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து விட்டீர்களா?” என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம், பொது மகன் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இலங்கையின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அண்மையில் முல்லைத்தீவில் பயங்கரவாதத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை இடம்பெற்ற போது நடு வீதியில் வைத்து அங்கு வந்த இளைஞரொருவர் இவ்வாறு சுமந்திரனிடம் கேள்வியெழுப்பி தடுமாற வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிடிக்கவில்லை என இதன்போது சுமந்திரன் தெரிவித்துள்ளமை காணொளியாக பதிவாகியுள்ளது.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri