ஜனாதிபதி அநுரவின் உருவத்தை உருவாக்கி சோழன் உலக சாதனை நிகழ்த்திய சிறுவன்
சன்சுல் செஹன்சா லக்மால் என்ற 11 வயது சிறுவன் 1,200 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayaka) பாரிய உருவப்படத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார்.
அவர் இந்த சாதனையை 3 மணி நேரம், 13 நிமிடங்கள், 7 வினாடிகளில் நிகழ்த்தி, சோழன் உலக சாதனைகளில் இடம்பெற்றுள்ளார்.
சோழன் புக் ஒஃப் வேர்ல்ட் ரெக்கோர்ட்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நேற்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
கௌரவிப்பு
கம்பஹா, யக்கலவில் உள்ள ரணவிரு ஆடை நீச்சல் தடாகத்தில் முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மஹா துவாக்கர் மற்றும் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் வாசகே ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில், சன்சுலின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில், அமைப்பாளர்கள், இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து, அவருக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் அவரது சிறப்பான சாதனையை கௌரவிக்கும் வகையில் ஒரு கிண்ணம் என்பவற்றை வழங்கியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri