அவிசாவளையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி
அவிசாவளை (Avissawella) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாச்சிமலை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் பண்டாரகமை (Bandaragama) பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவனொருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்த சிறுவன்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த சிறுவன் தனது நண்பர்களுடன் நாச்சிமலை ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது சிறுவனும் அவரின் நண்பரொருவரும் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது, சிறுவனின் நண்பர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை உயிரிழந்த சிறுவனின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan