எல்பிட்டிய பகுதியில் பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு
பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் எல்பிட்டிய - ஓமட்ட பகுதியில் இன்று (7.1.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புஷ்பகே திலான் தனுஷ்க என்ற 31 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை

எல்பிட்டியவில் இருந்து சென்ற தனியார் பேருந்தும், ஓமட்டவில் இருந்து எல்பிட்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று எல்பிட்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காலி நகரில் தேசிய மக்கள் சக்தி மகளிர் குழு கூட்டத்துக்கு கட்சி உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் எல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 1 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam