கொழும்பில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
எதிர்வரும் நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டத்தின் சுகாதார சேவை இயக்குனர் விசேட வைத்தியர் திலிப் லியனகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌயிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் 30 வயதிற்கு மேற்பட்ட இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. அதனை இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டிற்குள்ளாகுவதனை தடுப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி பாதுகாப்பளிப்பதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளதாக, கொழும்பு மாவட்டத்தின் சுகாதார சேவை இயக்குனர் விசேட வைத்தியர் திலிப் லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
