ரி20 கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் குண்டு வெடிப்பு-செய்திகளின் தொகுப்பு
ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் குண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அந்நாட்டின் தலைநகர் காபுலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு ரி20 கிரிக்கெட் லீக் போட்டி நேற்று நடைபெற்று வந்தது.
ஷபெஜா ரி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெண்ட் - இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர் ஷல்மி அணிகள் மோதின. இப்போட்டியை உள்ளூர் மக்கள் கண்டுகளித்தனர்.
இந்த போட்டியை தலீபான் அரசின் முக்கிய பிரதிநிதிகளும், ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. துணை தூதர் ராமிஸ் அலக்பரொவ் உள்பட பல்வேறு நபர்களும் கண்டுகளித்தனர்.
போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ஒரு அரங்கில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. மைதானத்தில் இருந்த கையெறி குண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,