தமிழகத்தில் இன்று எங்கும் புகை மண்டலம்! வெளியாகியுள்ள தகவல்!
போகி பண்டிகையான இன்று தமிழக பொதுமக்கள் பழைய பொருட்களுக்கு எரியூட்டி கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று போகி கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, போகி பண்டிகை இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது. போகியையொட்டி பொதுமக்கள் தங்கள் வீட்டின் வாசல் முன் பழைய பொருட்களை போட்டு தீயிட்டு கொளுத்தினர்.
சிறுவர்கள் கூட்டமாக கூடி மேளங்களை தட்டி போகியை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
சென்னையில் போகியன்று இன்று அதிகாலை பொதுமக்கள் பழைய துணிமணிகள், பாய் உள்ளிட்ட பொருட்களை தீயிட்டு கொளுத்தியதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டமாக காணப்படுகிறது.
சுற்றுச்சுழலை பாதிக்கும் பிளாஸ்டிக், டயர்கள் போன்றவற்றை எரிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அரசாங்கம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அந்த கோரிக்கையை ஏற்று பெரும்பாலானோர் பிளாஸ்டிக், டயர்கள் போன்றவற்றை எரிப்பதை தவிர்த்துள்ளனர்.
எனினும் ஏனைய பொருட்களை எரித்ததால் சென்னை உட்பட்ட மாநிலத்தில் புகையும் சூழ்ந்துள்ளது.
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
ஆதி பிளாக் மெயில் செய்ததால் தற்கொலை செய்துகொண்டு இறந்த இலங்கை பெண்... தாமரைச்செல்வி ஷாக்கிங் நியூஸ் Cineulagam