மொரட்டுவையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்: வெளியாகிய சிசிரீவி காணொளி
மொரட்டுவை - எகெடஉயன விஜயபுர பிரதேசத்திலுள்ள கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துளனர்.
குறித்த சடலம் இன்று (12.09.2023) முற்பகல் கரையோதுங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பகுதிக்கு காரில் வந்துள்ளதாகவும் அங்கு காரை நிறுத்திவிட்டு கடலில் குதித்துள்ள காட்சிகள் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் மஹரகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரெனவும் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் சடலமாக மீட்க்கப்பட்ட நபரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri