மொரட்டுவையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்: வெளியாகிய சிசிரீவி காணொளி
மொரட்டுவை - எகெடஉயன விஜயபுர பிரதேசத்திலுள்ள கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துளனர்.
குறித்த சடலம் இன்று (12.09.2023) முற்பகல் கரையோதுங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பகுதிக்கு காரில் வந்துள்ளதாகவும் அங்கு காரை நிறுத்திவிட்டு கடலில் குதித்துள்ள காட்சிகள் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் மஹரகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரெனவும் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் சடலமாக மீட்க்கப்பட்ட நபரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
