இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரின் பூதவுடல் நல்லடக்கம்
மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினரும் எழுத்தாளரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருமான அமரர் வேலுப்பிள்ளை தங்கராஜாவின் பூதவுடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினராகவும் முன்னாள் ஆசிரியராகவும் இருந்து தமிழ்த் தேசியத்திற்கும் கல்வித்துறைக்கும் அரும் பணியாற்றிய தவராஜா கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சுகவீனம் காரணமாக உயிரிழந்திருந்தார்.
அன்னாரின் பூதவுடல் கறுவப்பங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் இலங்கை தமிழரசுக்கட்யின் சிரேஷ்ட உபதலைவர் பொன்.செல்வராஜா தலைமையில் கட்சிக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகள் தமிழரசுக்கட்சியின் சார்பில் நடாத்தப்பட்டது.
அஞ்சலியைத் தொடர்ந்து அன்னாரது பூதவுடல் மட்டக்களப்பு மாநகரசபைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து உடலம் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு மட்டக்களப்பு கல்வியங்காடு
இந்து மயானத்தில் பெருமளவானோர் மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.




இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
