முல்லைத்தீவில் உணவகம் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து சடலம் மீட்பு
முல்லைத்தீவு நகரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் விடுதியின் நீச்சல் தடாகத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் பணியாற்றிவரும் அக்கரைப்பற்றை சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த இளைஞரை காணவில்லை என்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உணவகத்தின் நீச்சல் தடாகத்தில் சடலம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உணவகத்தின் உரிமையாளர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த முல்லைத்தீவு பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.