வவுனியா குளத்தில் தவறி வீழ்ந்த இளைஞன் சடலமாக மீட்பு
வவுனியா - மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி வீழ்ந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மேற்படி, குறித்த இளைஞன் தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராடச் சென்றபோது கால் தவறி குளத்துக்குள் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து ஊர் மக்கள் மேற்படி இளைஞனைத் தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். எனினும், கடந்த இரண்டு நாட்களாக இளைஞன் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தநிலையில் மேற்படி இளைஞனின் சடலம் அந்தக் குளத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மேலும் ,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan