வவுனியாவில் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் அநுராதபுரத்தில் மீட்பு!
வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வந்த மன்னார் - முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் காணாமல் போன நிலையில் நேற்றையதினம் (10.05.2023) மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை (08.05.2023) பழுதடைந்த துவிச்சக்கர வண்டிக்கு டயர் வாங்குவதற்காக சென்று காணாமல் போன நிலையில் நேற்று அநுராதபுரத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
காணாமல் போன மாணவ்கள்
கடந்த திங்கட்கிழமை அன்று குறித்த இரு மாணவர்களும் பழுதடைந்த துவிச்சக்கர வண்டிக்கு டயர் வாங்குவதற்காக சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் இரு மாணவர்களும் விடுதிக்கு திரும்பவில்லை.
இது தொடர்பில் விடுதி பங்குத் தந்தையர்களால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டள்ளதுடன், விடுதியின் காப்பாளர் மூலம் காணாமல் போன மாணவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் இருவரும் அநுராதபுரத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
இரு மாணவர்களையும் யாரேனும் கடத்திச்சென்றார்களா அல்லது அவர்களவே சென்றனரா என்பது தொடர்பில் பெலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW |