இடைநிறுத்தப்பட்ட எழுதாரகை படகுச் சேவை - சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்
2017ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட எழுதாரகை பயணிகள் படகுச்சேவை 2019ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஊர்காவற்றுறை, காரைநகர், எழுவை தீவு, அனலைதீவு, நயினாதீவு வரையான சேவை இடம்பெறுவதில்லை. இதனால் இப்பயணிகள் படகுச்சேவையை பயன்படுத்தும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இது சம்மந்தமாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்பணிப்பாளர் குரூஸிடம் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் பிரஸ்தாபித்துள்ளர்.
இது சம்மந்தமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆவன செய்வதாக திட்டப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இச்சேவை எதிர்காலத்தில் காரைநகர் இறங்குதுறையிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டுமெனவும் தவிசாளரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயணிகள் கப்பல் சேவை
1990 ஆம் ஆண்டுக்கு முன்பு காரைநகர் துறைமுகத்திலிருந்து மேற்படி சேவைகள் கிரமமாக இடம்பெற்றுள்ளன.
அத்துடன், எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்திற்கும் காரைநகரிலிருந்து பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கவேண்டுமென தவிசாளர் பணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது இப்பயணிகள் கப்பல் எழுவதீவு இறங்கு துறையில் தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
