தென்கொரிய கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி
தென்கொரியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் உள்பட பலர் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென அங்கு பாரிய அலை எழும்பியதால் கடற்றொழில் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு பணிகள்
இதுகுறித்து தகவலறிந்த தென்கொரிய கடலோரபொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்களை மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன் போது மயங்கிய நிலையில் இருந்த குறித்த கடற்றொழிலாளர்களுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 5 கடற்றொழிலாளர்கள் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு 6 உஉலங்கு வானூர்தி மற்றும் 12 ரோந்து படகுகளும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri