மலேசியாவில் கடல் பகுதியில் மீண்டும் படகு விபத்து: புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு
இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவைச் சட்டவிரோதமாகச் சென்றடையும் முயற்சியில் 6 இந்தோனேசியா பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர் என ஜகார்த்தா போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்தோனேசியாவின் பற்றம் தீவிலிருந்து மலேசியாவின் கடல் பகுதிக்குள் 13 இந்தோனேசிய புலம்பெயர்ந்தவர்களுடன் நுழைந்த படகு மலேசியாவின் ஹோஹோர் பகுதி அருகே விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இதில் 6 இந்தோனேசியர்களைக் கண்ட உள்ளூர் மீனவர்கள் மலேசியப் படையினருக்குத் தகவல் அளித்திருக்கின்றனர். மீண்டும் ஒரு இந்தோனேசியர் உயிருடன் கண்டறியப்பட்ட நிலையில், 6 இந்தோனேசியப் பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மலேசியாவின் ஜோஹோர் பகுதியில் நடந்த படகு
விபத்தில் 21 இந்தோனேசிய புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்திருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
