மலேசியாவில் கடல் பகுதியில் மீண்டும் படகு விபத்து: புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு
இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவைச் சட்டவிரோதமாகச் சென்றடையும் முயற்சியில் 6 இந்தோனேசியா பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர் என ஜகார்த்தா போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்தோனேசியாவின் பற்றம் தீவிலிருந்து மலேசியாவின் கடல் பகுதிக்குள் 13 இந்தோனேசிய புலம்பெயர்ந்தவர்களுடன் நுழைந்த படகு மலேசியாவின் ஹோஹோர் பகுதி அருகே விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இதில் 6 இந்தோனேசியர்களைக் கண்ட உள்ளூர் மீனவர்கள் மலேசியப் படையினருக்குத் தகவல் அளித்திருக்கின்றனர். மீண்டும் ஒரு இந்தோனேசியர் உயிருடன் கண்டறியப்பட்ட நிலையில், 6 இந்தோனேசியப் பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மலேசியாவின் ஜோஹோர் பகுதியில் நடந்த படகு
விபத்தில் 21 இந்தோனேசிய புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்திருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri