நாயாற்று பகுதியில் கடற்படையினரின் படகு கவிழ்ந்தது
முல்லைத்தீவு நாயாற்று கடற்படை முகாமிற்கு சொந்தமான கரையோர சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபடும் படகு ஒன்று கரையோர பகுதியில் விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியுள்ளது.
செட்ரிக் எனப்படும் கரையோர சுற்றுக்கால் நடவடிக்கையில் ஈடுபடும் படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
நாயாற்று பகுதியில் அதிகளவான கடல் மழைவெள்ள நீர் பெருங்கடலுடன் கலப்பதால் நீர் ஓட்டம் அதிகமாக காணப்படுகின்றது இந்நிலையில், களப்பு பகுதியில் இன்று (30) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படகு விபத்துக்குள்ளாகியதில் அதில் சென்ற கடற்படையினர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்கள்.
குறித்த படகினை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |