மன்னார் பொது வைத்தியசாலையில் மாபெரும் குருதிக்கொடை முகாம்
மன்னார் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் மாபெரும் குருதிக்கொடை முகாம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த முகாம், இரத்த வங்கி முகாமையாளர் அமரசேகரவின் ஏற்பாட்டில் இன்று (09.08.2024) காலை 8 மணி தொடக்கம் 1மணி வரை இடம்பெற்றுள்ளது.
மன்னார் ரோட்டரி கழகத்தில் தலைவர் திருமலைராசா தனேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் தொடர்ச்சியாக குருதி வழங்கும் கொடையாளர்கள் என 40இற்கும் மேற்பட்டவர்கள் குதியினை வழங்கியிருந்தார்கள்.
உறுப்பினர்களின் பங்களிப்பு
இதன்போது, குருதிக் கொடையாளர்களுக்கு குருதிக் கொடைக்கான பதிவுப் புத்தகம், அத்தாட்சிப் பத்திரம் மற்றும் நினைவுச் சின்னம் போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வு, மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், மன்னார் அஞ்சல் அலுவலகம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையினர், முதியோர் நலன் சார்ந்து செயற்படும் டெவ்லிங் நிறுவனத்தினர், மன்னார் ரோட்டரி
கழகத்தின் உறுப்பினர்கள் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |