தண்ணீரூற்று புனித மத்தியா ஆலயத்தில் இரத்ததான முகாம் (Photos)

Mullaitivu
By Uky(ஊகி) Sep 23, 2023 03:23 PM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report

வருடாந்த திட்டமிடல் நிகழ்ச்சிக்கேற்ப புனித மத்தியா ஆலயம் தண்ணீரூற்றில் இரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது.

இந்த இரத்த தான முகாம் இன்று (23.09.2023) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து முல்லைத்தீவு மாவட்ட சாரணர் ஆணையாளரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான நடராஜா ஜேம்சன் ஞானப்பொன்ராஜா கருத்து தெரிவிக்கையில்,

தண்ணீரூற்று புனித மத்தியா ஆலயத்தில் இரத்ததான முகாம் (Photos) | Blood Donation Camp In Mullaitivu

இந்த நிகழ்வில் 26 தன்னார்வ குருதிக் கொடையாளர்கள் பங்கெடுத்து இரத்த தானம் செய்திருந்தனர். இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கும் கொடையாளர் அளவு மிகவும் குறைவானதாக இருக்கின்றது.

சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்! பெரும் சர்ச்சையாகும் சம்பவம் (Video)

சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்! பெரும் சர்ச்சையாகும் சம்பவம் (Video)


பொது அமைப்புகளின் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்துகொள்ளும் செயற்பாடு குருதிக்கொடையாளர்களின் அளவினை அதிகரிக்கும். குறைந்தது நான்கு மாதங்களுக்கொரு முறை குருதிக்கொடை செய்யும் ஏற்பாட்டினை இலங்கை தேசிய இரத்த வங்கி செய்துள்ளது.

குருதிக்கொடையாளரின் குருதியானது நோய்களுக்கான சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு நோய்க்கிருமிகளற்ற தூய தன்மையை உறுதி செய்தபின்பே நோயாளிக்கு அது பயன்படுத்தப்படும்.

இதனால் குருதிக்கொடையாளர் தங்கள் நோய்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதனால் குருதிக் கொடையாளிப்பது இன்றைய சூழலில் எல்லோருக்கும் நன்மையானதொரு செயற்பாடு.

தண்ணீரூற்று புனித மத்தியா ஆலயத்தில் இரத்ததான முகாம் (Photos) | Blood Donation Camp In Mullaitivu

விபத்துக்கள் மற்றும் சத்திரசிகிச்சையின் போது அதிக குருதி தேவைப்படுகின்றது. அத்தோடு குழந்தை பிரசவிப்பு ,வைரசு நோய்களுக்காளானவர்களுக்கும் தலசீமியா நோயாளிக்கும் என குருதி தேவையுடையோர் பட்டியல் நீண்டு செல்வதனை நாம் அவதானிக்கலாம்.

ஆனாலும் தன்னார்வமாக குருதி கொடையளிக்கும் மனநிலை முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகக்குறைவாகவே இருக்கின்றமை மாவட்ட இரத்த வங்கியினருடனான உரையாடலில் இருந்து அறிய முடிகிறது.

கோட்டாபய மற்றும் மகிந்தவுடனான இரகசிய தொடர்புகளை அம்பலப்படுத்திய பிள்ளையான்

கோட்டாபய மற்றும் மகிந்தவுடனான இரகசிய தொடர்புகளை அம்பலப்படுத்திய பிள்ளையான்


இறப்புக்களை குறைப்பதற்கு உதவி

இளையவர்கள் மத்தியில் குருதிக் கொடையாளிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது. வைரசு சார்ந்த நோய் நிலைமைகளில் உடலில் குருதிச் சிறுதட்டுக்களின் அளவு வெகுவாக குறைந்து செல்லும். இதனால் டெங்கு போன்ற நோயாளருக்கு சிறுதட்டுக்களை மட்டும் பிரித்தெடுத்து மாற்றீடு செய்யும் சிகிச்சை முறை தற்போது உண்டு.

தண்ணீரூற்று புனித மத்தியா ஆலயத்தில் இரத்ததான முகாம் (Photos) | Blood Donation Camp In Mullaitivu

பிரசவிக்கும் தாய்மாருக்கும் குருதி அத்தியாவசிய தேவையை ஏற்படுத்தி விடுகிறது. விபத்துக்கள் அதிகம் நிகழும் இலங்கை போன்ற நாட்டுக்கு பொது தேசிய இரத்த வங்கி அமைப்பு உருவாக்கப்பட்டது குருதி பற்றாக் குறையினால் நிகழும் இறப்புக்களை குறைப்பதற்கு உதவியாக இருந்திருக்கிறது.இருந்து வருகின்றது.

ஆயினும் குருதி கொடையாளிப்பது சீரான ஒழுங்கில் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட இரத்த வங்கியின் வழமையான குருதிக்கொடையாளர்களில் ஒருவரான கவிஞர் நதுநசியிடம் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லாவால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் தொடர்பில் ரணில் விடுத்துள்ள உத்தரவு

ஹிஸ்புல்லாவால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் தொடர்பில் ரணில் விடுத்துள்ள உத்தரவு


முல்லைத்தீவு YMCA திரிசாரணர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் இணைந்து இந்த தன்னார்வ குருதிக்கொடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். குருதியை முல்லைத்தீவு மாவட்ட இரத்த வங்கியினர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US