விமானப்படையின் துப்பாக்கிச்சூட்டு பயிற்சி தளத்தில் பதிவான வெடிப்பு: விசாரணை குழு நியமனம்
கல்பிட்டியின் கந்தகுளி பகுதியில் உள்ள விமானப்படையின் துப்பாக்கிச்சூட்டு பயிற்சி தளத்தில் பதிவான வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் (26.09.2023) இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிபுணர்கள்
இந்த சம்பவத்தில் 28 வயதுடைய விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு நேற்று இரண்டு நிபுணர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam